Header Ads

தலையெழுத்தை மாற்றும் பிரம்ம மந்திரம்

நம்முடைய கர்மவினைகளை பொருத்து நம்முடைய தலையெழுத்து எழுதப்படுகின்றது.
நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளுக்கு ஏற்ப,
அந்த பிரம்ம தேவன் நம் தலையெழுத்தை எப்படி எழுதி இருந்தாலும் சரி,
அந்த தலை எழுத்தை மீண்டும் சரியான முறையில் திருத்தி எழுத கூடிய,
சக்தி பிரம்ம தேவருக்கு மட்டுமே உள்ளது.
பிரம்மதேவரை நாம் மனதார வழிபட்டு, செய்த பாவத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு,
இந்த மந்திரத்தை உச்சரித்தால் போதும்.

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பிரம்ம தேவனுக்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விடவேண்டும்.
பிரம்மதேவரின் படத்திற்கு முன்பு வெள்ளை நிற விரிப்பை விரித்து கொள்ள வேண்டும்.
மந்திரத்தை உச்சரிப்பவர்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொள்வது மேலும் சிறப்பு.
தரையில் உள்ள விரிப்பின் மீது சம்மணம் போட்டு அமர்ந்துகொண்டு, முதலில் விநாயகரையும் குலதெய்வத்தையும் வணங்கிக் கொள்ள வேண்டும்.


பின்பு பின்வரும், பிரம்ம தேவருக்கு உரிய மந்திரத்தை 108முறை உச்சரிக்க வேண்டும்
ஓம் நமோ பகவதே
சதுர்முகாய வேதாத்மனாய
ஹிரண்யகர்பாய பிரம்மாய ஸ்வாஹா

நம் உடலில் இருக்கும் நோய்கள் தீரும்.
வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் தீரும். நம்முடைய தலை எழுத்து தவறாக எப்படி கிருக்கப்பட்டு இருந்தாலும்,
அந்த தலையெழுத்து சரியான முறையில் திருத்தி எழுதி தரப்படும் என்பது மட்டும் உறுதி.
நம்பிக்கையோடு இந்த மந்திரத்தை தினம்தோறும் 108 முறை உச்சரிக உங்கள் தலையெழுது நல்ல படி மாறும்.

No comments:

Powered by Blogger.